ஒரு நேரடி ரிப்போர்ட்.
27.12.2004
டாக்டர் .வீ.புகழேந்தி MBBS
………………………………………………………………………………
கல்பாக்க அணுஉலைகளுக்கு சுனாமி இதுவரை அறிமுகமாகாத விருந்தாளி. அது 26.12.2004 அன்று காலை 8.50 – 9.10 மணிக்குக் கல்பாக்கத்தைத் தாக்கியது.
அணுஉலை வளாகத்தை சுனாமி தாக்கியதால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும், சேதங்களையும் குறித்து புதுப்பட்டிணத்திலும், வாயலூரிலும், சதுரங்கப்பட்டிணத்திலும் வாழும் மக்கள் மத்தியில் கடந்த 14 வருடங்களாகப் பணி புரிந்து வரும் என்னிடம் என்னைக் காண வருபவர் பலர் கூறினர். அவற்றை இங்கு தொகுத்து அளித்துள்ளேன்.
இவை உண்மையா, பொய்யா ஏன்பதை அறிய முடியாத சூழ்நிலையில், இதனால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைத் தவிர்ப்பது அணுசக்தித் துறை, தமிழக மற்றும் இந்திய அரசின் கடமைகளென நான் கருதுகிறேன். இந்தக் கருத்துக்களை உண்மையா, பொய்யா என்பதனை உறுதி செய்ய அணுசக்தித் துறை சாராத உரிய அதிகாரம் நிரம்பிய பொதுமக்கள் பரிசீலனைக் குழு ஒன்று உலை வளாகத்தைப் பார்வையிட்டு உண்மையை அறிந்திட மத்திய அரசு அனுமதி அளித்திட வேண்டும் ஏன்ற விண்ணப்பத்தையும் இங்கு நான் முன்வைக்கிறேன்.
………………………………………………………..
மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் (MAPS 1 and 2) அணுஉலைகளைக் குளிர்விப்பதற்காக குழாய்கள் மூலம் கடல் நீர் உள்ளே கொண்டுவரப் படுகிறது.
கடலுக்கு உள்ளே செல்லும் குழாய்களைக் காவல் காக்க மைய தொழில் பாதுகாப்புப் படையைச் (Central Industrial Security Force -CISF) சேர்ந்த இருவர் பணியில் அமர்த்தப் படுவர். சுனாமி கல்பாக்கத்தைத் தாக்கிய அன்று கடல் அலைகளால் ஒருவருக்கு பலத்த அடி ஏற்பட்டது. அவர் தற்சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலையும் அணு உலைகளையும் பிரிக்கும் தடுப்புச் சுவர் பல இடங்களில் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து நிலப்பகுதியை நோக்கி ஏறக்குறைய 200 – 550 மீட்டர் வரை கடல் அலைகள் உள்ளே வந்துள்ளன.
நீறேற்றும் கட்டிடம் (Pump House) வரை கடலலைகள் மேலெழும்பி வந்துள்ளன ஏன்பதை நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. நீரேற்றும் கட்டிடத்தில் உள்ள மோட்டார்கள் கடலலைகளில் மூழ்கியதால் அவை தாமாகவே டிரிப் இகியிருக்கின்றன. மின்சாரம் உற்பத்திப்பதற்குத் தேவையான ராட்சத செதில் சக்கரங்கள் (Turbines) உள்ள பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த பொறியாளருக்கு இது தெரிய வந்ததால் அவர் (இயங்கிக் கொண்டிருந்த MAPS 2 அணு உலையை) டிரிப் செய்ததாகக் (Safe Shutdown) கூறப் படுகிறது.
(26 ஆம் தேதியன்று MAPS 2 அணு உலையின் இயக்கம் நிறுத்தப்பட்டு பின்னர் சில நாட்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட) ஆய்வுகளுக்குப் பின்னர் அந்த உலையை இயக்கிய போது நீரேற்றும் கட்டிடத்தில் சிறு பிரச்சினை எழுந்ததாகவும், அதனைத் தனிக் குழாய்களை உயரத்தில் அமைத்து தீர்த்ததாகவும் தெரிகிறது.
இதன் பின்னர் MAPS 2 அணு உலை இயங்கத் தொடங்கியபோது Turbine பகுதியில் சிறு தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது சரி செய்யப்பட்ட பின்னரே அந்த அணுஉலை இயங்கத் தொடங்கியிருக்கிறது.
Pump Houseஐத் தாண்டி சுனாமி அலைகள் Turbine பகுதியில் புகுந்ததாக சிலர் கூறினர். சிலர் இந்த கூற்றை மறுத்தனர்.
MAPS அணுஉலை வளாகத்தில் உள்ள நில அதிர்வைப் பதிவு செய்யும் கருவி (Seismograph -பூகம்பமாணி) பேட்டரி சார்ஜ் இல்லாததால் சுனாமி உருவாகக் காரணமாயிருந்த நில அதிர்வையும், சுனாமியினால் உருவான நில அதிர்வையும், அதன் பின்னர் வந்த நில அதிர்வுகளையும் பதிவு செய்ய இயலவில்லை ஏன்று பலர் கூறினர்.
MAPS அணுஉலைகளின் (கதிரியக்கம் கூடுதலாக உள்ள) எரிந்து முடிந்த எரிபொருள்களை சேமித்து வைக்கும் பகுதி வரையிலும் (Spent Fuel Storage Area), (பல்லாயிர வருடம் கதிரியக்கத்தை வெளியிடும்) புளுட்டோனியத்தைப் பிரித்தெடுக்கும் ஆலை வரையிலும் (Plutonium reprocessing plant), கடல் நீர் சுனாமியின் போது வந்ததாகப் பலர் கூறுகின்றனர். இந்த இரு பகுதியிலும் கதிரியக்கம் அதிகம். இதனால் கதிரியக்கக் கசிவிற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
அதை உறுதி செய்வதற்கு அணுசக்தித் துறை சாராத ஒரு தனிப்பட்ட மக்கள் குழுவிற்கு (இது குறித்து பொறுப்பும், அக்கறையும் உள்ள தனி நபர்/ நிறுவனங்களுக்கு) உரிய அதிகாரத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் ஏன்று நான் கருதுகிறேன்.
தற்சமயம் 500 மெகாவாட் திறனுள்ள முன்மாதிரி வேக அணு உனி அணு உலைக்கான (Prototype Fast Breeder Reactor – PFBR) கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுமானப் பகுதியின் அடித்தளம் முழுவதும் கடல் நீரில் மூழ்கிப் போயுள்ளது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் 150 ஒப்பந்தக் கூலிப் பணித் தொழிலாளிகள் பணியில் உடுபட்டிருந்ததாக அணுசக்தி நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது.
சுனாமி அலையின் தாக்கத்தில் அருகில் வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி ஓருவர் மட்டுமே (பெயர்: காந்தம்மாள், தகப்பனார் பெயர்: தத்தையா, URC Company) இறந்து போனதாக அணுசக்தி நிர்வாகம் கூறுகிறது. இனால் சுனாமியின் போது இந்த இடத்தில் நிகழ்ந்த பிரச்சினைகள் குறித்து நமக்கு பல சந்தேகங்களும், அச்சங்களும் ஏற்பட்டுள்ளன. அவற்றை கீழே விவரிக்கிறேன்:
அ) PFBR இன் கட்டுமாணப் பணிகளுக்காக அதன் கீழ்பகுதி சுமார் 12 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
“இந்தக் குழிக்குள் இறங்கிட முறையாகப் படிகள் அமைக்கப்படவில்லை; பல இடங்களில் தொங்கும் ஏணிகள் மூலமாகக் கீழே இறங்கும்/ஏறும் நிலை இருந்திருக்கிறது; கான்கிரீட் கம்பிகள் / கட்டிட தளங்கள் இடையே உள்ள தொலைவை கட்டைகள் மூலமாகக் கடக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்திருக்கிறது” – இவை பலராலும் கூறப்படும் செய்திகள்.
இந்த இடத்தில் இருந்த கிரேனை இயக்கிக் கொண்டிருந்த பணியாளர் ஓருவரே கடல் கொந்தளித்து வருவதை முதலில் பார்த்திருக்கிறார். உடனே அவ்விடத்தில் இருந்தவர்களிடம் தான் பார்த்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார்.
இ) கடல் இந்தப் பகுதிக்குள் நுழைந்து மீண்டும் பழைய இடத்திற்கு சுமார் 15 நிமிடங்களில் திரும்பிச் சென்றிருக்கிறது.
ஆ) மேற்கூறிய செய்திகளை மனதில் கொண்டால், இந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த 150 பேர்களில் பலர் இறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவே படுகிறது. ஏனெனில், இந்த 12 மீட்டர் குழியில் இருந்து மேலேறி வருவதற்கே ஓவ்வொரு நபருக்கும் சுமார் 15 நிமிடங்கள் வரை ஆகும் என்பது என்னிடம் பேசிய பலரின் கூற்றாக இருக்கிறது.
உ) இந்த 150 பேர்களில் பெரும்பாலானோர் ஓரிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என்பது இது குறித்து விஷயம் தெரிந்த பலரால் கூறப்படும் செய்தியாகும். இவர்களனைவரும், சுனாமிக்குப் பிறகு பயந்து போய் தம் சொந்த மாநிலத்துக்கே ஓடிப்போய் விட்டனர் ஏன்பது அணுசக்தி நிர்வாகத்தின் கூற்றாகும். இந்தக் கூற்று நம்பும்படியாக இல்லை. இங்கு பலர் இறந்திருந்தால் அவர்களின் பிணங்கள் இருக்குமல்லவா? அவை இங்கு இல்லாதபோது அவர்கள் தம் சொந்த ஊர்களுக்கு யாருக்கும் சொல்லாமல் ஓடிப்போயிருப்பார்கள் என்றுதானே ஏடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நிர்வாகத்தினரின் வாதம்.
இருப்பினும், அணுஉலை நிர்வாகமும், இந்தக் கூலித் தொழிலாளர்களை ஒரிசா, பீகார் மாநிலங்களில் இருந்து அழைத்து வந்த Gammon India”சேர்ந்து இந்தக் கட்டுமானக் குழிக்கு அடுத்து ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டி இந்தத் தொழிலாளிகளின் சடலங்களை புதைத்து விட்டன என்று பலரும் கூறுகின்றனர்.
இந்த இடத்தில் நுழைய இராணுவத்தினர் தவிர மற்ற எவரும் சுனாமிக்குப் பிறகு மூன்று நாட்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது மேற்கூறிய செய்தி உண்மைதானோ என்ற அச்சத்தை நம்முள் ஏற்படுத்துவதாக உள்ளது.
PFBR அணுஉலையில் குளிர்விப்பானாக திரவநிலையில் உள்ள சோடியம் தனிமம் உபயோகப்படுத்தப்படும். திரவ நிலையில் உள்ள சோடியத்திற்கும், தண்ணீருக்கும் ஆகவே ஆகாது. இரண்டும் சேரும் தருணத்தில் பெரு வெடிப்புகள் நிகழும். கட்டுமான நிலையில் உள்ள PFBR உலையின் அடிப்பகுதி முழுவதுமே சுனாமி அலையில் மூழ்கிப் போயிருக்கிறது ஏன்ற சூழ்நிலையில் இந்த உலையை கடல் நீர் புக முடியாத வேறு ஓரு இடத்திற்கு மாற்றுவதுதானே அறிவுசார் முடிவாக இருக்க முடியும்?
இருப்பினும், PFBR கட்டுமான இடத்தை வேறு இடத்திற்கு எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது என்று நிர்வாகம் கறாராகக் கூறியிருப்பது எதிர்காலத்தில் நமக்கு என்ன நிகழப்போகிறதோ என்ற அச்சத்தை இங்குள்ள எல்லோரிடத்தும் ஏற்படுத்துவதாக உள்ளது.
கதிரியக்கம் நிறைந்த அணுக்கழிவுகளைக் கையாளும் பகுதி Centralised Waste Management Faclity (CMF) ஏன்றழைக்கப்படுகிறது. இது கடற்கரையிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதென்பதுவும், இனிமேல் ஒருவேளை சுனாமி ஓன்று ஏற்பட்டால் அது தப்புமா என்பதுவும் ஏன்னிடம் பேசிய பலர் எழுப்பிய முக்கியமான கேள்வியாகும்.
இதுபோலவே புளுட்டோனியத்தைப் பிரித்தெடுக்கும் உலையான Kalpakkam Atomic Reprocessing Plant (KARP) கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இதுவும் எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புள்ள ஒரு கடல் கொந்தளிப்பிலிருந்து தப்புமா ஏன்பதே பலரிடம் இருந்தும் வெளிப்பட்ட கேள்வியாகும்.
இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறும் முகமாக, இது குறித்து அணுசக்தித் துறையினரை வெளிப்படையான ஒரு விவாதத்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசும் கட்டளையிட வேண்டும் என்பதே இங்குள்ள பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த வெளிப்படையான விவாதத்தின் அடிப்படையில் இந்த உலைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பதே எம் அனைவரின் வேண்டுகோளாகும்.
PFBR அணுஉலை Coastal Regulation Zone Act -ஐ மீறிய அமைவிடத்தில் கட்டப்படுகிறது. இந்த அணு உலையைப் பொறுத்தவரை தண்ணீரும், திரவ நிலை சோடியமும் இணைவதற்கான சூழ்நிலைகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். அதுபோலவே, அந்த உலையின் மற்ற பகுதிகளில் கூட தண்ணீர் நுழைய வாய்ப்பு ஏற்படும்.
ஏன்றால், அது அந்த அணு உலையை Criticality என்ற அணுஉலை வெடித்து சிதறுவதற்கான சூழ்நிலைக்குத் தள்ளிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.
எனவேதான் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகளே தொடஙகப்பட்டிருக்கும் அந்த உலையின் அமைவிடத்தை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதே சாலச்சிறந்த செயலாக இருக்கும்.
கல்பாக்கம் அணுஉலைகளால் இயற்கை சீற்றங்களைத் தாங்கி பாதுகாப்பாக இயங்கிட முடியுமா என்பது மீதான வெளிப்படையான விவாதத்தை அணுசக்தித் துறை நடத்திட வேண்டும் என்ற கட்டளையை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்பதுவே மத்திய, மாநில அரசுகளுக்கு இங்கு வாழும் மக்கள் அனைவரும் வைக்கும் கோரிக்கையாகும்.
……………………..
குமுதம் பத்திரிகை 14-2-2005 இதழில் “திகில்பாக்கம் – மரணக்குழி” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை கீழே:














